இடுகைகள்

tamil லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிஎஸ்என்எல் புதிய முயற்சி : இனி ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டர்நெட் எளிதாக பெறலாம் !

படம்
  பிஎஸ்என்எல் புதிய முயற்சி : இனி ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டர்நெட் எளிதாக பெறலாம் !  பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் புதிதாக புக் மை ஃபைபர் ( BookMyFiber ) என்ற போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இனி எளிதாக இணைய இணைப்பு பெற முடியும் . ஜியோவுக்குப் போட்டியாக ஏர்டெல் , வோடஃபோன் போன்ற தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் இருந்தாலும் , அதற்கு இணையாக மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் வாடிக்கையார்களை கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் , பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது .  அந்தவகையில் பி.எஸ்.என்.எல் நாட்டின் ஒவ்வொருவீடு , இடம் மற்றும் கிராமத்திற்கும் இணையத்தை வழங்குவதற்காக ஒரு புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது , இதன் மூலம் தற்போது நகரத்திலிருந்து பல மைல் தொலைவில் உள்ள உங்கள் கிராமத்தில் இணையத்தைப் பெறலாம் . பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் BookMyFiber என்ற பெயரில் போர்ட்டல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த சேவை பயனர்களை அதன் பாரத் ஃபைபர் சேவைகளின் கீழ் புதிய இணைய இணைப்புகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது . இதில் உலக வரைபடம் காட்டப்படும் . அதில் நமது இருப்பிடத்தை ஜூம் செய்து குறிப்பிட்ட...

தாய்மையின் சிறப்பு

இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார். "தம்பி ஆஸ்பத்திரி போகணும்" "நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்". "என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி. "நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த கார் ஓட்டும் இளைஞன். அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, கார் அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது. கார் ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. இரண்டு ரெயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது. இப்போது கார் இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது. நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண...